For Daily Alerts
Just In
அஸ்ஸாம் வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி
திப்ருகர்: அஸ்ஸாமில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ்காரர் உள்பட 4 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அஸ்ஸாமின் ஜோனாய் பகுதியில் நேற்று திருவிழா நடந்துக் கொண்டிருந்தது. அங்கு 1500க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
அப்போது இரவில் அங்கு திடீரென்று குண்டு வெடித்தது. இதில் போலீஸ்காரர் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 53 பேர் படுகாயமடைந்தனர்.
உல்பா தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
Comments
Story first published: Sunday, March 16, 2008, 17:57 [IST]