வீணாகும் மூன்றில் ஒரு பங்கு ரேஷன் பொருட்கள்-ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

Chidambaram
டெல்லி: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் உணவு தானியங்களில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது. இதைத் தடுக்க மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ராஜ்யசசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு ப.சிதம்பரம் அளித்த பதிலில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களில் 36.38 சதவீதம் வீணாகிறது.

போலி ரேஷன் கார்டுகளின் பெருக்கம் இதற்கு முக்கிய காரணம். மேலும் சரியான முறையில் உணவு தானியங்களை இருப்பு வைக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதும் இன்னொரு காரணம்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் உணவு தானியங்களை பொதுமக்களிடம் உரிய முறையில் கொண்டு செல்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். உறுதியான நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

விநியோகம் முறையாக நடக்கிறதா, இருப்புகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா, பொதுமக்களுக்கு உரிய முறையில் அவை சென்றடைகிறதா என்பதை மாநில அரசுகள்தான் கண்காணிக்க வேண்டும்.

உணவு தானியங்களை மாநிலங்களுக்கு வழங்குவது மட்டுமே மத்திய அரசின் பணி. அவற்றை உரிய முறையில் பாதுகாத்து, மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கே உள்ளது.

ரேஷன் பொருட்கள் பெரிய அளவில் வீணாவதும், முறைகேடாக போய்ச் சேருவதும் கவலை தருவதாக உள்ளது. இதை நாம் நிச்சயம் தீவிரமாக கவனிக்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+