முதலிரவு அறையில் ரூ.2.6 லட்சம் நகை திருட்டு
நெல்லை: பாளையங்கோட்டையில் முதலிரவு நடந்த அறையில் புகுந்து புதுமண தம்பதியிடம் ரூ.2.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடிக்கப்பட்டன.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் நாங்குநேரி ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மகரஜோதிலெட்சுமி. எம்எஸ்சி, எம்.பில் படித்துள்ள இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஓரு தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு சாந்திநகரில் உள்ள பெண் வீட்டில் முதலிரவு நடந்தது.
இருவரும் தாங்கள் அணிந்திருந்த நகைகளை ஒரு பையில் வைத்துவிட்டு மாடிக்கு சென்றனர்.
நள்ளிரவில் வீட்டிற்குள் சுவர் ஏறிக்குதித்து உள்ளே வந்த கொள்ளையன் ஜன்னல் வழியாக கையை விட்டு தாழ்பாளை திறந்து நகை இருந்த பையை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டான்.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.2.60 லட்சம் ஆகும்.












Click it and Unblock the Notifications