பிரியாணியி்ல் போதை பொருள் கடத்தல்
சென்னை: பிரியாணிக்குள் மறைத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள கேட்டமைன் போதை மாத்திரைகளை மலேசியாவுக்கு கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் ஒவ்வொருவராக அதில் ஏறிக் கொண்டிருந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் கையில் பிளாஸ்டிக் பையுடன் ஏறினார். சந்தேகத்தின் பேரில் அவரை சுங்க இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
இதில் அவர் கடலூரைச் சேர்ந்த நந்தகுமார் (28) என்பது தெரிந்தது. கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்ததில் 12 பிரியாணி பார்சல்கள் இருந்தன.
அவற்றை மலேசியாவில் உள்ள நண்பர்களுக்காக கொண்டு செல்வதாக நந்தகுமார் கூறினார். ஆனால் அந்தப் பொட்டலங்களை திறந்து பார்த்தபோது, அதற்குள் தடைசெய்யப்பட்டுள்ள கேட்டமின் மாத்திரைகள் இருந்தன.
50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் நந்தகுமாரை பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications