For Daily Alerts
Just In
திருச்சியில் விவசாயிகள் பேரணி-சோனியா பங்கேற்பு?
திருச்சி: திருச்சியில் நடக்கவுள்ள விவசாயிகள் பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏப்ரல் 6 ம் தேதி திருச்சியில் விவசாயிகள் பேரணி நடைபெற உள்ளது.
இந்த பேரணியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைத்து பின்னர் நடக்கும் கூட்டத்தில் பேசுவார் எனத் தெரிகிறது.
இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துக் கொள்ள உள்ளனராம்.
Comments
Story first published: Saturday, March 22, 2008, 14:45 [IST]