டிஜிபி ஆகிறார் கே.பி.ஜெயின்
Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள ராஜேந்திரன், தற்போது பதவி நீட்டிப்பில் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய டிஜிபியாக கே.பி. ஜெயின் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது ஜெயின், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து வருகிறார்.
உ.பி மாநிலத்தைச் சேர்ந்தவரான ஜெயின், 1971ம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் கேடரில் தனது காவல் பணியைத் தொடங்கியவர். சேலத்தில் பயிற்சி எஸ்.பியாக தனது பணியை தொடங்கினார். அதன் பின்னர் மதுரை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றினார்.
1980ம் ஆண்டு பட்டாலியன் கமாண்டராக டெல்லிக்கு சென்றார். பின்னர் கூடுதல் டிஜிபியாக சென்னை திரும்பி வந்தார்.












Click it and Unblock the Notifications