பாறையில் ஜீப் மோதி இன்ஸ்பெக்டர் பரிதாப சாவு
தேனி: தேனி மாவட்டம் போடிமெட்டு மலைப் பகுதியில் பாறையில் ஜீப் மோதியதில் அதில் பயணம் செய்த தனிப்படை இன்ஸ்பெக்டர் கர்ணன் பரிதாபமாக பலியானார். 7 போலீஸாருக்கு படுகாயம் ஏற்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த தனிப்படை போலீஸார் ஒரு குற்ற வழக்கில் தொடர்புடைய இருவரை கேரள மாநிலம் மூணாறு சென்று கைது செய்தனர். குற்றவாளிகளுடன் அவர்கள் ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது போடி மெட்டு பகுதியில் ஜீப் வந்தபோது, ஒரு வளைவில் திரும்பியபோது ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து மலைப்பள்ளத்தில் ஜீப் உருண்டது.
அப்போது பாறையில் ஜீப் மோதி விழுந்ததில், அதில் பயணம் செய்த இன்ஸ்பெக்டர் கர்ணன் (47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
7 பேர் காயமடைந்தனர். அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications