ஓகனேக்கல் நமது மரபுரிமை-வைரமுத்து
சென்னை: இந்தியாவின் வரைபட அடிப்படையிலும் தமிழ்நாட்டின் மரபுரிமை அடிப்படையிலும் ஓகனேக்கல் நமக்கு சொந்தம்தான் என்று கவியரசு வைரமுத்து கூறினார்.
ஓகேனக்கல்லை சொந்த கொண்டாடும் கர்நாடகத்துக்கு எதிராக தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்ற வைரமுத்து பேசுகையி்ல்,
ஓகனேக்கல் தமிழகத்திற்குள்தான் உள்ளது என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன, தீர்ப்பு கூறியுள்ளன. இந்தியாவின் வரைபடம் உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டின் மரபுரிமை அடிப்படையிலும் ஓகனேக்கல் நமக்கு சொந்தம்தான் என்று கட்டியம் கூறுகிறது.
ஓகனேக்கல் என்பது கர்நாடக எல்லைக்குள் உள்ளது, எனவே கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுப்போம் என்று கூறுவது கடும் கண்டனத்துக்குரியது.
கஷ்டமாக இருக்கிறது - குஷ்பு:
கர்நாடகத்தில் நடந்து வரும் தாக்குதல்களை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. அங்கு என்ன பிரச்சினை வந்தாலும் உடனே தாக்குதலுக்கு ஆளவது தமிழர்கள்தான். தீர்வு குறித்து யோசிக்காமல் தாக்குவது என்பது பொறுப்பற்றது. கண்டிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications