Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உகாதி: ஆளுநர்,, கருணாநிதி, ஜெ. வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினமான உகாதியையொட்டி தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமான உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், உகாதி திருநாளையொட்டி என் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு அமைதியையும், வளத்தையும், ஒற்றுமையையும் கொடுத்து நாட்டுக்கு நன்மை சேர்க்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தின் பண்பாட்டுணர்வோடு ஒன்று கலந்து பல ஆண்டுகளாகத் தமிழக மக்களோடு இணைந்து வாழும் தெலுங்கு சமுதாய மக்கள் அனைவரது வாழ்வும், தொழிலும் சிறந்து, வளம் பெருகிட என் இதயம் கனிந்த உகாதித் திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

மனித நேயத்தின் அடிப்படையில் இந்த நல்லுறவு பேணும் பாங்கும், மற்றவர்களை மதிக்கும் நல்லிணக்க உணர்வுகளும் தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் தழைத்திட வேண்டுமென்பதைத் தமிழகம் எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வசந்த காலத்தின் தொடக்கமாகத் திகழும் உகாதித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நிலவுகின்ற இதுபோன்ற ஒருமைப்பாடு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தழைத்தோங்க வேண்டும் என்ற என்னுடைய அவாவைத் தெரிவித்து, இந்த உகாதித் திருநாள் புதிய வாழ்வையும், வளத்தையும் வெற்றிகளையும் வழங்கும் புத்தாண்டாக மலரட்டும் என்று வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் வாழ்த்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உகாதியில், மக்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு, ஏற்ப நாட்டிலுள்ள அனைத்து மக்களும் வேற்றுமைகள் இன்றி அவ்வப்போது ஏற்படும் சமுதாய பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உகாதி என ஆந்திரா, கர்நாடகத்தில் கொண்டாடப்படும் இந்த புது வருடப் பிறப்பு, வடக்கில் குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த் உள்ளிட்ட பெயர்களில் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+