For Daily Alerts
Just In
ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்-ஒன்றே பிழைத்தது
மதுரை: மதுரையில் அரசு பொது மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன.
மதுரை மாவட்டம், ஆண்டார்கொட்டாரம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி, விவசாயி. இவரது மனைவி ஜெயா (23).
3 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது.
இந்த நிலையில் ஜெயா கர்ப்பம் தரித்தார். இதையடுத்து பிரசவத்திற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து மொத்தம் 5 குழந்தைகள் பிறந்தன.
இதில் 3 பெண் குழந்தைகள். மற்ற இரண்டும் ஆண் குழந்தைகள் ஆகும். அனைத்துக் குழந்தைகளுமே எடைக் குறைவாக பிறந்தன. பிறந்த சில மணி நேரங்களில் நான்கு குழந்தைகள் இறந்து விட்டன.
முதலில் பிறந்த ஆண் குழந்தை மட்டும் உயிருடன் உள்ளது. அதை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
Comments
Story first published: Monday, April 7, 2008, 16:48 [IST]