ராஜ வைத்தியம் பெயரி்ல் விபச்சாரம்-2 பேர் கைது
சென்னை: மசாஜ் செய்வதாகக் கூறி விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான விபச்சார கும்பல் தலைவி சோனியா என்ற துணை நடிகையை தேடிவருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் கே.கே. சாலை 4வது தெருவில் 'ராஜவைத்தியம்' என்ற போர்வையில் விபச்சாரம் கொடிகட்டிப் பறப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. ஒரு பிரபல ஆங்கில நாளிதழில் மசாஜ் செய்வதாக விளம்பரம் செய்து பகிரங்கமாக இந்த விபச்சாரத் தொழில் நடந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அதிரடியாக சென்று சோதனையிட்டனர்.
அங்கு விபச்சாரத்தி்ல் ஈடுபட்டிருந்த பிரியா (24), மஞ்சுளா (25) ஆகியோரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் விளம்பரத்தைப் பார்த்து செல்போனில் தொடர்பு கொள்ளும் ஆண்களிடம் பிரபல நடிகைகளை அழைத்து வருவதாகக் கூறி ஆயிரக்கணக்கில் பணம் பிடுங்கியதையும் ஒப்புக்கொண்டனர்.
இந்த கும்பலின் தலைவியான சோனியா என்ற துணை நடிகை தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.