இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை நீர்கொழும்பை சேர்ந்த குருகுல சூரியா ரோசிங்கடன் நிமால் பினாந்து, குருகுல சூரியா ஜோசப் ஜெயன், ஆன்டனி கிறிஸ்டோபர் பிலேந்திரா, ஜோசப் பிட்லி ஆகிய 4 மீனவர்கள் செயின்ட் ஆண்டனி என்ற படகில் நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நடுகடல் பகுதிக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அங்கு போதிய மீன் கிடைக்காததால் அவர்கள் 300 கிலோ எடையுள்ள மீன்களுடன் ஆழ்கடல் பகுதிக்கு சென்றனர். அப்போது நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் அவர்கள் படகு குமரி கடல் பகுதிக்கு இழுத்து வரப்பட்டது.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படை காமாண்டிங் அதிகாரி சுபேந்தர சிங் மற்றும் அதிகாரிகள் இந்திய எல்லைக்குள் அத்துமிறி நுழைத்த அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் வந்த படகு, மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் தூத்துக்குடி துறைமுக மீன்துறை அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+