கோடை உஷ்ணத்தில் தகிக்கும் தமிழகம்-மே 3 முதல் 'கத்திரி'!
சென்னை: தமிழகத்தில் மிகக் கடுமையான வெயில் வீசத் தொடங்கிவிட்டது.
வழக்கமாக தமிழகத்தில் பிப்ரவரி மாத இறுதியிலேயே சூரியன் சுட்டெரிக்கும். ஆனால், இம்முறை பருவம் தவறி மார்ச் மாதம் முழுவதும் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது.
ஆனால், இந்த பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் நாசமாகி விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.
கோடையின் ஆரம்பத்தை மக்கள் கடும் வெயில் இல்லாமல் அனுபவித்தனர். ஆனால், மெதுவாக மழை நிற்கத் தொடங்கியதோடு வெயிலும் பின்னி எடுக்க ஆரம்பித்துவிட்டது.
கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தை வறுக்க ஆரம்பித்துவிட்டது கோடை. வெயிலுக்கு பேர் போன வேலூரில் வெயில் அளவு 100 டிகிரியைத் தாண்டிவிட்டது. கடும் வெயிலால் அப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதே போல தர்மபுரி, சேலம், தஞ்சை போன்ற மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரியை தொட்டு விட்டது. நேற்று முன்தினம் தஞ்சை, வேலூரில் வெயில் 102.2 டிகிரி அளவுக்கு இருந்தது. சென்னை, தர்மபுரி, சேலத்தில் 100.4 டிகிரியைத் தொட்டது.
இந் நிலையில் வரும் மே மாதம் 3ம் தேதி சனிக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்த கத்திரி வெயில் மே 28ம் தேதி வரை நீடிக்கும்.
இதனால் 26 நாட்களுக்கு கத்திரி கொடுமை செய்யவுள்ளது.
தென் தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் வைகை, பெரியாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளும் நிரம்பின.
இந் நிலையில் இப்போது மழை அறவே நின்றுவிட்டதால் அணைகளுக்கு நீர்வரத்தும் சுத்தமாக நின்றுவிட்டது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 98.5 அடியாகவும், பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாகவும் வைகை அணையின் நீர்மட்டம் 70.64 அடியாகவும் உள்ளது. இந்த அணைகளுக்கு இப்போது நீர் வரத்து ஏதும் இல்லை.
ஆனாலும் போதிய அளவு நீர் இருப்பதால் இந்தக் கோடையில் பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்பது தான் பெரிய நிம்மதி தரும் விஷயம்.
-
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications