தரமணியில் ரூ. 3000 கோடியில் சிறப்பு ஐடி பொருளாதார மண்டலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தரமணியில் ரூ. 3000 கோடி மதிப்பீட்டில் சிறப்பு ஐடி பொருளாதார மண்டலம் உருவாக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
டாடா ரியாலிட்டி நிறுவனம் உள்ளிட்ட இரு நிறுவனங்கள், தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்துடன் இணைந்து இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கவுள்ளன.
ரூ. 3000 கோடியில் உருவாகவுள்ள இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம், பன்னாட்டுத் தரத்துடன், அதி நவீன வசதிகளுடன் கூடியதாக உருவாக்கப்படும்.
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் மூலம் நேரடியாக 40 ஆயிரம் பேருக்கும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும். 2009ம் ஆண்டு முதல் கட்டப் பணிகள் முடிவடையும்.
இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.












Click it and Unblock the Notifications