For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லஞ்சப் பணத்தை 'விழுங்கிய' எஸ்ஐ கைது!

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக ஐநூறு ரூபாய் நோட்டுகளை விழுங்கினார் எஸ்ஐ.

ஹைதரபாத் மெஹதிபட்டனம் ஹூமாயூன் நகர் போலீஸ் எஸ்ஐ சந்திரகிரண். இவர் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அருகில் இருந்தபடியை அவரை கண்காணித்தனர்.

இதை கவனிக்காத சந்திரகிரண் லஞ்சப் பணத்தை வாங்கினார். அப்போது மறைந்திருந்த அதிகாரிகள், ஓடிவந்து அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

அவர்களின் பிடியில் இருந்த தப்பித்த அவர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே ஓடி, ஓடும் பஸ்சில் ஏறினார். அதிகாரிகள் அவரை விடாமல் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்தனர்.

இதையடுத்து லஞ்சப் பணம் ரூ.4000த்தை லபக் என்று விழுங்கிவிட்டார் சந்திரகிரண்.

விழுங்கியது அனைத்தும் ரூ.500 நோட்டுகளாகும்.

ஆனாலும் சந்திரகிரணை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X