பாலிடெக்னிக்குகளில் சேர மே 5 முதல் விண்ணப்பம்
சென்னை: தமிழகத்தில் பாலிடெக்னிக்குகளில் இந்த ஆண்டு கூடுதலாக 10,000 இடங்கள் வரை சேர்க்கப்படவுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் 3 ஆண்டுகள் பயில வேண்டும். பிளஸ் டூ முடித்தவர்கள் 2 வருடம் படித்தால் போதும் ('லேட்டரல் எண்டிரி').
பிளஸ் டூ மாணவர்கள் சேர்க்கைக்கு பாலிடெக்னிக்குகளில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் 22 அரசு பாலிடெக்னிக்குகளும், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளும், 205 சுயநிதி பாலிடெக்னிக்குகளும் உள்ளன.
அரசு பாலிடெக்னிக்குகளில் 5,160 இடங்களும், அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் 12,980 இடங்களும், சுயநிதி பாலிடெக்னிக்குகளில் 69,316 இடங்களும் உள்ளன.
இந் நிலையில் இந்த ஆண்டு புதிதாக 50 பாலிடெக்னிக்குகள் தொடங்க அனுமதி தரப்படலாம் எனத் தெரிகிறது. அப்படிப்பட்ட நிலையில் மேலும் 10,000 இடங்கள் உருவாகவுள்ள.
இந் நிலையில் பிளஸ் டூ முடித்துவிட்டு பாலிடெக்னிக்குகளில் 2வது ஆண்டு சேரும் மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் அனைத்து அரசு பாலிடெக்னிக்குகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.
விண்ணப்பக் கட்டணம் ரூ.150. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கட்டணம் இல்லை.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். www.tndte.com என்ற இணையதளத்திலும் பெறலாம்.
இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறுபவர்கள் ரூ.150க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் மே 21ம் தேதி.
10ம் வகுப்பு மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் சேருவதற்கான விண்ணப்பம் செய்வது குறித்த விவரங்களை அரசு விரைவில் வெளியிடும்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications