புயல் சின்னம் போயும் குமரியில் கடல் சீற்றம் நீடிப்பு
நாகர்கோவில்: நர்கீஸ் புயல் ஆபத்து நீங்கிய பின்னரும் கூட கன்னியாகுமரியில் தொடர்ந்து கடல் சீற்றம் நீடிப்பதால் மீனவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது வலுவடைந்து நர்கீஸ் புயல் சின்னமாக மாறியது. புயல் ஆபத்து தமிழகத்தை விட்டு நீங்கி விட்ட பின்னரும் கூட குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி, குளச்சல், இராமையன் துறை, மார்த்தாண்டம்துறை மணக்குடி, வள்ளவிலை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நேற்று மாலை ராட்சாத அலைகள் எழுப்பின. சுமார் 30 அடி முதல் 40 அடிவரை எழுப்பிய அலைகள் மணற்பரப்பையும் தாண்டி வந்து மிரட்டன. இதனால் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.
இன்றும் தொடர்ந்து ராட்சாத அலைகள் அடித்து வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடந்த 2 ஆழ்கடலில் பயங்கர சூறாவளி வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. மீன்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications