லோக்சபாவில் ரகளை: 32 எம்.பிக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!
டெல்லி: லோக்சபாவில் பெரும் ரகளையில் ஈடுபட்டு, சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட 32 எம்.பிக்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ரகளையில் ஈடுபடுவதும், கூச்சல், குழப்பத்தில் ஈடுபடுவதும், சபாநாயகர் இருக்கை முன்பு கூடி அமளி செய்வதும் வாடிக்கையாகி விட்டது.
கேள்வி நேரம் டார்ச்சர் நேரமாகி விட்டது என்று சோம்நாத் சாட்டர்ஜி விரக்தியுடன் கூறும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 32 எம்.பிக்களுக்கு, சபையில் அமளி செய்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி சோம்நாத் சாட்டர்ஜி, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 24ம் தேதி விலைவாசி உயர்வு பிரச்சினையை கிளப்பி தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, அமளியில் ஈடுபட்ட 32 எம்.பிக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
நேற்று இதுகுறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உரிமைக் குழுவை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள எம்.பிக்களில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் 23 பேர் ஆவர். மற்றவர்கள் பகுஜன் சமாஜ் கட்சி, சிரோண்மனி அகாலிதளம், பிஜூ ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
எம்.பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
பாஜக கண்டனம்:
ஆனால் சோம்நாத் சாட்டர்ஜியின் நடவடிக்கைக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், இது மிகவும் பாரபட்சமான நடவடிக்கை என்றார்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications