ரூ.7 லட்சம் இரும்பு கம்பிகளுடன் லாரி மாயம்!
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் இருந்து பெங்களூருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள இரு்ம்பு கம்பிகள் ஏற்றி சென்ற லாரி காணாமல் போனது.
சேலம் அருகே உள்ள அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இரும்பு கம்பிகள் தயாரிக்கும் நிறுவன அதிபர். ஆடரின் பேரில் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு ரூ.7 லட்சத்து 14,727 மதிப்புள்ள இரும்பு கம்பிகளை கடந்த மாதம் 18ம் தேதி அனுப்பி வைத்தார்.
ஆனால் கம்பி லோடு வரவில்லை என்று பெங்களூரில் இருந்து தகவல் வந்தது. லாரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து லாரி ஏஜென்டிடம் செல்வராஜ் விசாரித்தார். அதற்கு லாரி டிரைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டனர்.
இதுகுறித்து சேலம் மாநகர மத்திய போலீசாரிடம் செல்வராஜ் புகார் அளித்தார். லாரி கடத்தப்பட்டுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications