வேன் மீது கார் மோதி ரயில்வே ஊழியர்கள் உள்பட 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி: பரமக்குடிக்கு அருகே காரும் வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ரயில்வே ஊழியர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் வீராச்சாமி (46). உச்சிப்புளி ரயில்வே கேட்கீப்பராக வேலை செய்தார். அவருடன் கேபிள் மேனாக வேலை செய்தவர் சோலைமுத்து (57).
இருவரும் உச்சிப்புளிக்கு நேற்று காரில் சென்றுக் கொண்டிருந்தனர். பரமக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக அந்த கார் மோதியது.
இந்த விபத்தில் வீராச்சாமி, சோலைமுத்து மற்றும் கார் டிரைவர் சுரேஷ் (21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications