சேது கால்வாய்: உச்சநீதிமன்ற யோசனையை மத்திய அரசு பரிசீலிக்கும்- பாலு

ரூ.2,400 கோடி செலவிலான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்தும்போது, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் மாற்றுவழியில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு சென்னை உயர்நீதிமன்றம் கூறிய யோசனையை உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் அமைச்சர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இதை ஒரு யோசனையாகத்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரவாக சொல்லவில்லை. மாற்றுவழி குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளின் முழு விவரமும் மத்திய அரசுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
அந்த விவரங்கள் கிடைத்தவுடனே அது பற்றி நன்கு ஆய்ந்து மேற்கொண்டு நடவடிக்கை எடு்க்கப்படும் என்றார் பாலு.
முன்னதாக, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரி்த்தது.
விசாரணையில், மாற்று வழி குறித்து மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்ததோடு, 25 கி.மீ. நீளமுள்ள 'ஆதாம் பாலம்' என்றும் அழைக்கப்படும் ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட புராதன சின்னமா என்பதை உறுதி செய்வதற்கு மத்திய தொல்லியல் துறையினர் ஏதாவது விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்களா என்ற விவரத்தையும் மத்திய அரசு தெரிவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications