உத்தரகாண்ட்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 15 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகர் என்ற இடத்தில் மலைப் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 15 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கிய பேருந்து, பிதோரகரிலிருந்து பாகேஸ்வர் என்ற இடத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. அப்போது திடீரென மலைப்பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பிரேக் பிடிக்காமல் பேருந்து கவிழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications