For Daily Alerts
Just In
இலங்கை சிறையிலிருந்து 19 தமிழக மீனவர்கள் விடுதலை
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 5ம் தேதி தங்கச்சிமடத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இந்த 19 பேரையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அனுராதபுரா சிறையில் அடைத்தனர்.
இந்த நிைலயில் 19 பேரையும் விடுதலை செய்து தலைமன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து 19 மீனவர்களும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Thursday, May 22, 2008, 17:29 [IST]