ராணுவ கண்ணிவெடி தாக்குதல்-குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கிளிநொச்சி: கிளிநொச்சி அருகே முறிகண்டி என்ற இடத்தில் இலங்கை ராணுவம் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் குழந்ைதகள் உள்பட 16 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் 4 பேர் பச்சிளம் குழந்தைகள் ஆவர். 3 பேர் சிறுவர்கள், 6 பேர் பெண்கள். இந்த மோசமான தாக்குதலில் ஒரு குடும்பமே பரிதாபமாக இறந்து போய் விட்டது.

கிளிநொச்சி இரணைமடுச் சந்திப்பில் உள்ள மக்கள் முழங்காவிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது இலங்கை ராணுவத்தின் ஆழ்நிலை ஊடுறுவும் அணியினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி இவர்கள் உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்த இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தனர். ஒருவர் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

இறந்தவர்களில் அழகுராணி (45) என்பவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன. அனைவரும் அனாதையாகியுள்ளனர்.

கொல்லப்பட்ட 16 பேரின் உடல்களும் கிளிநொச்சி பாரதி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைத்து உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+