அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவி துணிகர கடத்தல்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த கும்பல், மாணவியைக் கடத்திக் கொண்டு காரில் பறந்தது. அவர்களை விரட்டிய போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட 2 சென்னை வாலிபர்களைக் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் ேசர்நதவர் செளமியா. இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ. இறுதியாண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.
நேற்று தேர்வு நடந்தது. இதை முடித்து விட்டு விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் செளமியா. அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் வந்து கத்தியைக் காட்டி தங்களுடன் வருமாறு மிரட்டினார். பின்னர் செளமியாவை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அண்ணாமலை நகர் போலீஸார் காரை துரத்திச் சென்றனர். வல்லம்படுகை சோதனைச் சாவடி அருகில் அந்த காரை போலீஸார் மடக்கி நிறுத்தினர்.
பின்னர் செளமியாவை மீட்டனர். அவரைக் கடத்திச் சென்ற 2 வாலிபர்களையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் சென்னை கொடுங்கையூரைச் ேசர்ந்த ஜேசுராஜ், முத்து என்பது தெரிய வந்தது.
ஜேசுராஜும், செளமியாவும் காதலித்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் ஜேசுராஜைப் பிடிக்காமல் விலகி விட்டார் செளமியா. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் ஜேசுராஜ், முத்துவுடன் சேர்ந்து செளமியாவைக் கடத்த முயன்றது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications