மெட்ரிக்-குமாரபாளையம் மாணவி முதலிடம்
சென்னை: மெட்ரிக்குலேசன் 10ம் வகுப்பு தேர்வில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த மாணவி அபிராமி மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர்
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமி அம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தவர் ஆவார்.
2வது இடத்தில் 2 பேர்:
இரண்டாவது இடத்தை நாமக்கல் மாவட்டம், காவெட்டிபட்டியில் உள்ள குறிஞ்சி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவர் கரமத்துல்லாவும்,
சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளி மாணவி வர்ஷா ராமனும் பிடித்துள்ளனர்.
இவர்கள் 488 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
3வது இடத்தில் 6 பேர்:
487 மதிப்பெண்கள் பெற்று 6 பேர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களது விவரம்:
1. ரஜப் பாத்திமா, பாரத் மான்டெஸ்சரி மெட்ரிகுலேசன் பள்ளி குற்றாலம், தென்காசி
2. சாந்தா மீனா டி.வி.எஸ்.மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளி, மதுரை
3. விக்ரம், ஸ்ரீவிஜய் வித்யா மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி, காந்தி நகர், தர்மபுரி
4. பிரியதர்ஷினி, இந்தியன் மெட்ரிக் குலேசன் மேல் நிலைப்பள்ளி, பறையபட்டி புதூர், தர்மபுரி
5. ஸ்ராவந்திகா லட்சுமி, ஆல்பா மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி. மேற்கு சி.ஐ.டி. நகர், சென்னை
6. சந்தியா, ஸ்ரீகிருஷ்ணசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளி, சென்னை
ஆங்கிலோ இந்தியன்-குன்னூர் மாணவி முதலிடம்:
ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குன்னூர் செயின்ட் ஜோசப் கான்வென்ட் மாணவி ஜோத்சனா 486 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
ஷிவானி, செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியப் பள்ளி, திருச்சி, அனுஸ்ரீ பன்சால், செயின்ட் கெவின்ஸ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆகியோர் 485 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர்.
சோபியா, செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியப் பள்ளி, திருச்சி, வைஷ்ணவி, ரயில்வே மிக்ஸ்டு பள்ளி, பெரம்பூர் ஆகியோர் 484 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளனர்.