For Daily Alerts
Just In
மெட்டல் டிடெக்டர் 'மிஸ்ஸிங்'-ஏட்டு சஸ்பெண்ட்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டர் கருவி காணாமல் போனதையடுத்து ஏட்டையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் வருவோரை வரும் 1ம் தேதி முதல் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்து அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக நீதிமன்ற போலீசாருக்கு மெட்டல் டிரெக்டர்கள் வழங்கப்பட்டன. இந் நிலையில் ஒரு டிடெக்டர் கருவி காணாமல் போயுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி ஏட்டு ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாயமான மெட்டல் டிடெக்டர் கருவியை தேடும் பணி நடந்து வருகிறது.
நீதிமன்ற பாதுகாப்புப் பணிக்காக துணை கமிஷனர் ஒருவர் மேற்பார்வையில், 3 உதவி கமிஷனர்கள் மற்றும் 250 போலீசார் அடங்கிய தனி போலீஸ் குழுவை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Friday, May 30, 2008, 16:04 [IST]