ஆழியாறு: தமிழக-கேரளா திருவனந்தபுரம் பேச்சு தோல்வி
சென்னை: தமிழக-கேரளா மாநிலங்களிடையிலான பரம்பிக்குளம்- ஆழியாறு நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து திருவனந்தபுரத்தில் இன்று உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் மீண்டும் கூடி பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பாசனத்துக்காக பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்ப் பாசனத் திட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் இருந்து உருவாகும் ஆனமலையாறு, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு ஆகிய 4 ஆறுகள் கேரளா வழியாக ஓடி, கடலில் கலக்கின்றன.
இந்த ஆறுகளின் நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் 1958ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆறுகளில் இருந்து தமிழகம் 30.5 டி.எம்.சி. நீரையும், கேரளா 20 டி.எம்.சி. நீரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனமலையாறை திசை திருப்புவது உட்பட 10க்கும் மேற்பட்ட விவகாரங்களில் தமிழகம்- கேரளா இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
மேலும் பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக இன்று திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, பொதுப்பணித் துறை செயலாளர் ஆதிசேஷையா, மின்சார வாரியத் தலைவர் மச்சேந்திரநாதன், காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மோகன்தாஸ் உள்ளிட்ட தமிழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
இவர்கள் கேரளா தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறை செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறும் என தமிழக தலைமை செயலர் திரிபாதி தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications