பெண் குளிக்கையில் படம் பிடித்த வாலிபர்களுக்கு தர்ம அடி
நெல்லை: பாளையங்கோட்டை அருகே உள்ள பூக்குழியை சேர்ந்தவர் ராஜமணி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கில்பர்ட். மும்பையில் வேலை பார்க்கும் இவர் சில நாட்களுக்கு முன் திருவிழாவுக்காக ஊருக்கு வந்தார்.
அப்போது, ராஜமணியின் மனைவி குளித்துக் கொண்டிருந்தை கில்பர்ட்டும் அவரது நண்பரான ஜான்சனும் மறைந்திருந்து செல்போனில் படம் பிடித்தனர்.
இதைப் பார்த்துவிட்ட ராஜமணியின் மனைவி கூச்சல் போடவே இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதையடுத்து ராஜமணி மற்றும் அவரது மைத்துனர் செல்வின், பாக்கியநாதன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து ஜான்சனையும், கில்பர்ட்டையும் கடுமையாகத் தாக்கினர்.
இதைத் தொடர்ந்து கில்பர்ட்டின் உறவினர்கள் ராஜாமணியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications