ரயிலில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஜெவின் பாதுகாப்பு படையினர்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: ஓடும் ரயிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொட நாடு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது பாதுகாப்பு பணிக்காக தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ வீரர்கள் உடன் சென்றுள்ளனர்.

அதே போல சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனபால் நேற்று முன் தினம் திருப்பூர் வந்தார். அவரது பாதுப்பு பணிக்கு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வந்திருந்தார்.

தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ வீரர்களும், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜனும் ரயில் மூலம் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ரயிலில் எஸ்-5 கோச்சில் பயணம் செய்த இவர்களுக்கு இடையே லக்கேஜ் வைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் சுந்தர்ராஜனுக்கு அடி உதை விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து சுந்தர்ராஜன் திருப்பூர் ரரயில்வே போலீஸ்ல் இது குறித்து புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தேசிய பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுபாஷ், காவலர்கள் ரத்தோர், ராஜேஸ் பிகாரி, ராஜீவ் குமார், சேகர், வினோத் குமார், சதாம் ஆகிய ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே சப்-இனஸ்பெக்டர் சுந்தராஜன் தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேரும் உடனே விடுவிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+