திருச்சி-சென்னை சேவை தொடங்கும் பாரமவுண்ட் ஏர்வேஸ்
திருச்சி: திருச்சி - சென்னை - திருச்சி மார்க்கத்தில், புதிதாக இரு தினசரி விமான சேவைகளை தொடங்கவிருப்பதாக பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் 2வது வாரத்திலிருந்து இந்த புதிய விமான சேவை அமலுக்கு வருகிறது. தினசரி இரு முறை இந்த விமான சேவை மேற்கொள்ளப்படும் என பாரமவுண்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திருச்சி விமான நிலையத்தில் பாரமவுண்ட் நிறுவனத்தின் அலுவலகம் தொடங்கப்படும். தொடக்கத்தில், 70 சீட்கள் கொண்ட ஜெட் எம்பிரேயர் ரக விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
திருச்சி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளதால், திருச்சி விமான நிலையம், பெருமளவில் லாபம் தரும் விமான மையமாக திகழ்கிறது. மேலும் இங்கு ஐடி பூங்காவும் அமைக்கப்படவுள்ளதால், திருச்சி நகரின் தொழில் முக்கியத்துவம் மேலும் கூடியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விமான சேவை காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும்.
பாரமவுண்ட் நிறுவனத்திடம் 5 விமானங்கள் இருக்கிறது. தற்போது எட்டு பிரிவுகளில் 42 தினசரி சேவைகளை அது மேற்கொண்டு வருகிறது. ஜூலை மாதம் மேலும் 2 விமானங்கள் சேரவுள்ளன. 2010ம் ஆண்டுக்குள் 40 விமானங்களைக் கொண்டதாக இது விரிவுபடுத்தப்படும்.
திருச்சிக்கும், திருவனந்தபுரம், கொச்சிக்கு இடையே புதிய சேவையைத் தொடங்கவும் திட்டமிட்டு வருகிறோம்.
2011ம் ஆண்டு முதல் சர்வதேச விமான சேவையை தொடங்கவும் பாரமவுண்ட் திட்டமிட்டுள்ளது என்றார் தியாகராஜன்.
-
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications