2 அரசுப் பள்ளிளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் இரண்டு அரசுப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அய்யம்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட சிறப்புப் போலீஸ் அலுவலகத்திற்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு பெண் இந்த மிரட்டலை விடுத்தார்.
இதையடுத்து போலீஸார் மோப்ப நாய்கள் சகிதம் அந்தப் பள்ளிகளுக்கு விரைந்தனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பின்னர் இரு பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
தொலைபேசி மிரட்டல் விடுத்த பெண் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications