மரத்தில் கார் மோதி தொழிலதிபர் உள்பட 2 பேர் பலி
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மரத்தில் கார் மோதியதில், கோவையை சேர்ந்த தொழிலதிபர் பரிதாபமாக பலியானார். கார் டிரைவரும் உயிரிழந்தார்.
கோவை கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (59). தொழிலதிபர்.
இவர் தனது குடும்பத்தினருடன் கோவையில் இருந்து டாடா சபாரி கார் மூலம் திருநெல்வேலியில் நடக்க உள்ள உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றார்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வடுகபட்டி என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மைல் கல் மீது மோதியது. பின்பு அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இந்த சம்பவத்தில் கார் டிரைவர் நசீர், தொழில் அதிபர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
ஆறுமுகத்தின் மனைவி மல்லிகா, மகள்கள் தீபா, கங்கா தேவி , மகன்கள் ஆனந்த், சிவன், உள்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications