வேலூர், திருவண்ணாமலையில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், ஆரணி உள்ளிட்ட சில பகுதிகள், வேலூர் மாவட்டம் ஆம்பூர், பாகாயம், ஓட்டேரி, குடியாத்தம், வாணியம்பாடி, கணியம்பாடி, வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவுகோளில் 3.8 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
நள்ளிரவு 11.40 மணியளவில இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து விநாடிகளே இந்த நிலநடுக்கம் நீடித்தது. இதனால் வீட்டில் உள்ள கட்டில், பீரோ உள்ளிட்டவை ஆடின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
நில அதிர்ச்சி காரணமாக பலர் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications