சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம்-தவ்ஹீத் ஜமாத்!
திருவாரூர்: முஸ்லீம்களுக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக தவ்ஹீத் ஜமாத் எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பின் பொது குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
இதன் பின் அதன் மாநிலச் செயலாளர் சர்புதீன் செய்தியாளர்களிடம் பேதுகையில்,
நீண்ட கால போரட்டத்தின் விளைவாக தமிழக அரசு 3.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால் இந்த ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தவில்லை.
தமிழக அரசு தற்போது 30,000 பேருக்கும் மேல் வேலை கொடுத்துள்ளது. ஆனால் அதில் எங்களுக்கு உரிய பிரதிநிதிதுவம் அளிக்கப்படவில்லை.
எங்களுக்குரிய பங்களிப்பை உடனே வழங்க வேண்டும். இல்லையெனில் தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு தருவதாக கூறி காங்கிரஸ் கட்சி முஸ்லீம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பின்பு அது குறித்து மெளனம் காத்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications