அடுத்த தேர்தலிலும் காங்கிரசுடன் கூட்டணி-ராமதாஸ்
சென்னை: வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணியில்தான் பாமக நீடிக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக பொதுக்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. நீடிக்கிறது. சோனியா காந்தியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் பா.ம.க. செயல்படும்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் போது அந்த கூட்டணியில் பா.ம.க.வும் இடம்பெறும்.
திருமாவளவன், முதல்வர் கருணாநிதியைசந்தித்தது தொடர்பான முழு விவரங்களும் எனக்கு கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் இதுகுறித்துக் கூறுகிறேன் என்றார்.
முன்னதாக பொதுக்குழுக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், வெகுமக்கள் கட்சியாக பாமகவை நடத்திக் கொண்டிருக்கிறோம். பா.ம.க.வின் பயணம் இனி தொய்வின்றி தொடரும்.
எத்தனை தடை கற்கள் வந்தாலும், அந்த தடைக் கற்களை உடைத்து முன்னேறக்கூடியவர்கள் எங்கள் தொண்டர்கள். எங்களுக்கு என்றும் தோல்வியில்லை. வெற்றி, வெற்றி மேல் வெற்றி தான் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications