திடீர் தேர்தல் வந்தால் நடத்த தயார்: தேர்தல் ஆணையர் கோபாலசாமி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக திடீர் தேர்தல் வந்து விடுமோ என்ற குழப்பத்தில் அனைவரும் இருக்கும் நிலையில், தேர்தல் வந்தால் அதை நடத்த தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் தற்போது தொகுதி மறு சீரமைப்புப் பணிகளில்தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர் பட்டியலையும் அதற்கேற்ப மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
இனிமேல் நடக்கும் தேர்தல்கள் புதிய தொகுதிகளின் அடிப்படையில்தான் நடத்தப்படும். சில மாநிலங்களில் மட்டுமே அந்தப் பணிகள் முடிவடையாமல் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அப்பணிகள் முடிவடைந்து விட்டன.
ஒருவேளை நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், தேர்தல் ஆணையத்திற்கு ஆறு வார கால அவகாசம் போதுமானது என்றார்.












Click it and Unblock the Notifications