மீண்டும் ஒரு 'ஹைட்ரோகார்பன்' கதை...

மீண்டும் ஒரு பெட்ரோலியக் கதை. உனக்கு இதைவிட்டால் வேறு எதுவுமே தெரியாதா என்று சிலர் கேட்கலாம். இன்றைய தேதியில் 'ஹைட்ரோகார்பன்' தான் உலக ஹீரோ. இதனால் எனக்கு மிகப் பிடித்தமான அரசியல் விவகாரங்களை விட்டுவிட்டு பெட்ரோலியம் பற்றி மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இதை எழுத வைத்தது என் முதல் கட்டுரைக்கு உங்களிடம் கிடைத்த வரவேற்பு தான்.
கதைக்கு வருவோம். யூக வர்த்தகத்தால் பெட்ரோலிய விலை உயர்ந்தாலும் இதற்கு உடனடித் தீர்வு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தான் என OPEC நாடுகளிடம் உலக நாடுகள் வைத்த கோரிக்கையை செளதி ஏற்றுக் கொண்டுவிட்டது.
உறுதியளி்த்தபடி செளதி எண்ணெய் துறை அமைச்சர் அலி நைமி நடந்து கொண்டால், அடுத்த வாரத்தில் இருந்து (ஜூலை) ஒரு நாளைக்கு 2,55,000 பீப்பாய்கள் அளவுக்கு கூடுதலாக எண்ணெய் 'பம்ப்' செய்யப்படவுள்ளது.
ஆனால், செளதி அரேபியா உற்பத்தி செய்யப் போகும் இந்த கூடுதல் எண்ணெய் சந்தைக்கு வரப் போகும் அதே நேரத்தில் இன்னொரு இடத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் எண்ணெய் நிற்கப் போகிறது (தாற்காலிகமாவது). அது நைஜீரிய எண்ணெய்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் கச்சா எண்ணெய் கிடைக்கிறது. இங்கு அதிக அளவில் எண்ணெய்யை உற்பத்தி செய்து வருவது டச்சு நிறுவனமான ஷெல் (Shell). ஆனால், நைஜீரியாவின் சொத்தை ஷெல் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் கொள்ளையடித்து வருவதாகக் கூறி அந்த நிறுவனங்களையும் அவற்றின் கட்டமைப்புகளையும் தாக்க ஆரம்பித்துள்ளன நைஜீரிய நாட்டு அதிருப்தி அமைப்புகள். குறிப்பாக 'மென்ட்' (Mend) என்ற அமைப்பு.
'Movement for the Emancipation of the Niger Delta' என்பது தான் இந்த 'மென்ட்' அமைப்புக்கு விரிவாக்கம். சரியாகச் சொன்னால் இதுவும் ஒரு தீவிரவாத அமைப்பு தான்.
இந்த அமைப்பின் தொல்லை தாங்க முடியாமல் நிலப் பகுதியில் எண்ணெய் எடுப்பதை கைவிட்டுவிட்டு நடுக் கடலில் போய் எண்ணெய் உற்பத்தி செய்ய (offshore) ஆரம்பித்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். கிட்டத்தட்ட கரையிலிருந்து 120 கி.மீ. தூரத்தில் ஆயில் பிளாட்பார்ம்களை அமைத்து எண்ணெய்யை தோண்டி எடுத்து வருகின்றனர்.
இதற்காக ஷெல் நிறுவனம் போங்கா (Bonga) என்ற மாபெரும் கப்பல்-கம்-எண்ணெய் உற்பத்தி மற்றும் சேமிப்பு கிடங்கை (floating oil production and storage facility) பயன்படுத்தி வருகிறது. 3.6 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த எண்ணெய் உற்பத்திக் கப்பல் இதுவரை மென்ட் அமைப்பிடம் இருந்து தப்பி வந்தது. காரணம், இந்தக் கப்பல் நைஜீரிய கடலோரத்தில் இருந்து 100, 120 கி.மீ தூரத்தி்ல் இருந்தது தான்.
ஆனால், சில நாட்களுக்கு முன் 3 அதிவேக படகுகளில் வந்த மென்ட் தீவிரவாதிகள் போங்காவை 'பதம்' பார்த்துவிட்டுப் போய்விட்டனர். இதனால் போங்கா எண்ணெய் பிளாட்பார்ம் 'ஷட்-டவுன்' செய்யப்பட்டுவிட்டது. (போகும் வழியில் ஒரு அமெரிக்கக் கப்பலையும் தாக்கி அதிலிருந்த மாலுமியையும் கடத்திச் சென்றுவிட்டனர்).
'போங்கா' அடியானதால் அப்படி என்ன பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி குறைந்துவிடப் போகிறது என்கிறீர்களா?. OPEC-ன் மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் நைஜீரியாவில் தான் உற்பத்தியாகிறது, குறிப்பாக அதை போங்கா தான் தோண்டி எடுத்து வருகிறது என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
எண்ணெய் எடுப்பதை போங்கா நிறுத்தி 4 நாட்களாகிவிட்டது. ஆனால், இதன் தாக்கம் இன்னும் சில வாரங்கள் கழித்துத் தான் சந்தையில் உணரப்படும்.
செளதியின் கூடுதல் எண்ணெய் சந்தைக்குள் நுழையும் அதே நேரத்தில் நைஜீரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த எண்ணெய் நிற்கப் போகிறது... மென்ட் தீவிரவாதிகளை முழுமையாக ஒடுக்காத வரை போங்கா தாக்குதல்கள் தொடரத்தான் போகின்றன..
இந்தக் காரணம் போதாதா.. கச்சா எண்ணெய் விலையை மேலும் சில டாலர்கள் ஏற்றி விடுவதற்கு...?
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications