அணு சக்தி ஒப்பந்தம் மிக மிக முக்கியம்: ஜார்ஜ் புஷ்

இதுகுறித்து அமெரிக்க அதிபரின் பத்திரிக்கைச் செயலாளர் டானா பெரினோ செய்தியாளர்களிடம் கூறுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா முன்னேற்றமான முறையில் செயல்பட வேண்டும். அப்போதுதான் எங்களாலும் அதில் வேகமாக முன்னேற முடியும்.
இதுதொடர்பாக தொடர்ந்து இந்தியாவுக்கு நினைவூட்டல்கள் சென்று கொண்டிருக்கின்றன. இது மிக மிக முக்கியமான ஒப்பந்தம் என்று அதிபர் புஷ் கருதுகிறார் என்றார் அவர்.
நேற்று முன்தினம் பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் கேசி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு நாள் தாமதமும் எங்களுக்கும், இந்தியாவுக்கும் நஷ்டமாகும். எனவே தாமதத்தால் இரு நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இது இரு நாடுகளுக்கும் உகந்த ஒப்பந்தமாகும் என்று கூறியிருந்தார்.
இடதுசாரிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பெரும் இழுபறி நிலவி வரும் நிலையில், மீண்டும் இந்தியாவுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபரின் கருத்து வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications