வீட்டில் வைத்திருந்த கோவில் நகைகள் கொள்ளை
திருவாரூர்: திருவாரூர் அருகே செட்டியப்பர் மீனாட்சி சுந்தரர் கோவிலுக்கு சொந்தமான ரூ. 1 லட்சம் மதிப்பிலான சுவாமி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே பேரளம் மணந்தகுடி அய்யம்பேட்டை உள்ளது. இங்கு செட்டியப்பர் மீனாட்சி சுந்தரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே ஊரை சேர்ந்த கைலாசம் (59) என்பவர் குருக்களாக உள்ளார்.
பாதுகாப்பு கருதி இவரது வீட்டில் உள்ள பூரோவில் சுவாமியின் நகைகளை வைத்திருந்தார். இந்த நிலையில் கைசாலம் குருக்கள் வெளியூர் சென்றிருந்தார்.
வெளியூர் சென்றவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு, மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுவாமி நகைகள் 16 கிராம் எடை கொண்ட 4 தங்க மோதிரங்கள், 12 கிராம் தங்க செயின், 12 கிராம் தங்க வளையல், சுமார் இரண்டு கிலோ எடை கொண்ட வெள்ளி கவசம் போன்றவைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து கைலாசம் குருக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுவாமி நகைகளை கொள்ளயடித்த மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்னறனர்.












Click it and Unblock the Notifications