For Daily Alerts
Just In
அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷிக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சை
கொல்கத்தா: மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
வடக்கு தினாப்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்ச் என்ற இடத்தில் சுற்றுப்பயணத்தில் அவர் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு அவரை கொல்கத்தா கொண்டு வந்தனர். அங்கு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கபப்ட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
Story first published: Monday, July 7, 2008, 11:07 [IST]