For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பூரில் பாமக பந்த்: அரசு பஸ் தீவைத்து எரிப்பு - பதட்டம்

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்: நொய்யல் ஆற்றில் சாயக் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து நிறுத்தக் கோரி பாமக சார்பில் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அங்கு அதிகாலையில் அரசுப் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது. இதைத்தடுத்து நிறுத்தக்கோரியும், பாசன நிலங்களைக் காக்கக் கோரியும், குடிநீர் ஆதாரங்களைக் காக்கக் கோரியும் இன்று ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்த பாமக அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து திருப்பூரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் வாகனப் போக்குவரத்து பெரிய அளவில் முடங்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் அதிக அளவில் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்றுஅதிகாலை 4 மணியளவில் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ் ஒன்று மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

43 ஆண்டுகளுக்குப் பிறகு ..

கடந்த 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதுதான் திருப்பூரில் பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. அதன் பிறகு பல பந்த்துகள், கடையடைப்புகள் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ள போதிலும் பேருந்துகள் எரிக்கப்பட்டதில்ைல.

ஆனால் 43 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டிருப்பதாக திருப்பூர் மக்கள் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X