தக்கலை பள்ளிவாசல் ஆண்டு விழா: குமரியில் 18-ம் தேதி விடுமுறை

Subscribe to Oneindia Tamil

தக்கலை: புகழ் பெற்ற தக்கலை பீரப்பா பள்ளிவாசல் (Peerappa masjid) ஆண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜூலை 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

விழாவையொட்டி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மெÜலூது ஓதும் நிகழ்ச்சியுடன், மார்க்க பேரூரையாற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

9-ம் தேதி சென்னை தலைமை இமாம் ஷதீதுத்தின் பாசில் பாகவி "உற்றாருமில்லை உறவாருமில்லை இங்குன்னையன்றி' என்ற தலைப்பில் பேசுகிறார்.

10,11-ம் தேதிகளில் சென்னை அரபிக் கல்லூரி நிறுவனர் முகம்மது ஷபீர் ஆலிம்பாசில் பாகவி "ஏந்தல் நபியின் எதிர் நீச்சல்' என்ற தலைப்பில் பேசுகிறார். 12-ம் தேதி "மனிதன் தூங்குகிறான் மரணம் விழித்திருக்கிறது' என்ற தலைப்பிலும், 13-ம் தேதி "ஷரீஅத்தும் தரீகத்தும்' என்ற தலைப்பில் புதுக்கோட்டை மேலப்பள்ளிவாசல் இமாம் ரபீயுத்தீன் பாகவி பேசுகிறார்.

14-ம் தேதி "கலிமாவை நெஞ்சுள் கலங்காமல் தஹாக்கனவனே' என்ற தலைப்பிலும், 15-ம் தேதி "இஸ்லாம் நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பிலும் சேலம் அரபிக் கல்லூரி பேராசிரியர் முகம்மது அபுதாகீர் பாகவி பேசுகிறார்.

16-ம் தேதி நடக்கும் இலக்கிய கருத்தரங்கில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை வகிக்கிறார். இதில் பீரப்பா இலக்கியங்களில் கதையாடல்கள் என்ற பொருளில் உத்தமபாளையம் பேராசிரியர் அப்துல்சமதும், பீரப்பா பாடல்களில் அல்குர்ஆன் சிந்தனைகள் என்ற பொருளில் பேராசிரியர் அப்துல் ரகுமான் ஆகியோர் பேசுகின்றனர்.

17-ம் தேதி இரவு 9 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பீரப்பா எழுதி பாடிய ஞானப்புகழ்ச்சி பாடலைப் பாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்நிகழ்ச்சி இரவு தொடங்கி அதிகாலை 5 மணி வரை நடைபெறும்.

இதைத் தொடர்ந்து 18-ம் தேதி மாலை 4 மணிக்கு நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சியும், 20-ம் தேதி இரவு 7 மணிக்கு 3-ம் சியாரத் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

உள்ளூர் விடுமுறை:

இந்த விழாவையொட்டி வரும் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி. ஜோதி நிர்மலா உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினத்திற்கு ஈடாக ஆகஸ்ட் 2-ம் சனிக்கிழமை (ஆக. 9) மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக இருக்கும்.

ஜூலை 18-ம் தேதி மாவட்டத்திலுள்ள தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்களுக்கும் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என்றும் ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+