ஆக. 11ல் நாடாளுமன்றம் கூடுகிறது: 13ம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கு?
Subscribe to Oneindia Tamil

இடதுசாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்ட சூழ்நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறைக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்தது. இதில் மழைக் காலக்கூட்டத் தொடரை ஆகஸ்ட் 11ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பிரணாப் முகர்ஜி பேசுகையில், குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டால் ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் நம்பிக்கை வாக்குகோரப்பட்டு அரசின் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்படும்.
மழைக் காலக் கூட்டத் தொடருக்கு முன்பே நம்பிக்கை வாக்கு கோர குடியரசுத் தலைவர் உத்தரவிட்டால் சிறப்புக் கூட்டம் கூட்டப்படும். மக்களவையில் மட்டுமே நம்பிக்கை வாக்கு கோரப்படும் என்றார் பிரணாப்.












Click it and Unblock the Notifications