காடுவெட்டி குருவின் 2 ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு தாக்கல் செய்த இரு ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காடுவெட்டி குரு, கொலை மிரட்டல் மற்றும் வெடிகுண்டு வீசியது ஆகிய இரு வழக்குகளில் ஜாமீன் வழங்கக் கோரி பெரம்பலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை நீதிபதி கலாவதி விசாரித்தார். பின்னர் இரு ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக அவர் உத்தரவிட்டார்.
முன்னதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காடுவெட்டி குரு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications