உதவும் மத்திய அரசு-தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை எடுத்துக் கூறினார், இதைத் தொடர்ந்து நேற்று மாலையே, மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தமிழ்நாடு இல்லத்துக்கு வந்தார். அங்கு முதல்வரையும், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியையும் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து இன்று காலை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை அவரது இல்லத்தில் தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி சந்தித்து பேசினார். அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு, தமிழகத்திற்கு தினமும் கூடுதலாக 100 மெகா வாட் மின்சாரம் வழங்க ஒப்புக் கொண்டனர். இவ்வாறு செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சுஷில்குமார் ஷிண்டே கூறுகையில்,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் மின் வெட்டுக்கு முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த தொடர் மின்வெட்டு விரைவில் சரி செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications