'ஹிட் லிஸ்டில்' நெல்லையப்பர் கோயில்-பலத்த பாதுகாப்பு
நெல்லை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைத் தொடர்ந்து திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலும் தீவிரவாதிகள் மிரட்டலில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் ஹிட் லிஸ்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலும் தீவிரவாதிகள் மிரட்டலில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து நேற்று முதல் நெல்லையப்பர் கோயிலுக்கு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் வாசலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு ரத வீதிகளிலும் போலீஸ் வாகன ரோந்து தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் வாசலில் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நெல்லையில் தீவிரவாதி அப்துல் கபூர் கைது செய்யப்பட்டுதை அடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலத்தப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் விடிய விடிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications