மெயில் அனுப்பிய அமெரிக்கர் குறித்து தெரியாது: யுஎஸ்
வாஷிங்டன்: இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் மிரட்டல் இ மெயில் அனுப்பிய அமெரிக்கர் குறித்து எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அகமதாபாத் குண்டுவெடிப்புக்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு டிவி நிறுவனங்களுக்கு ஒரு மெயில் வந்தது. அதில் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு இந்த குண்டுவெடிப்புக்கு தாங்களே காரணம் என்று கூறியிருந்தது.
இந்த இ மெயில், நவி மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டிலிருந்து வந்ததது. அந்த வீட்டை, அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் வாடகைக்கு எடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் கோன்சாலோ கல்லேகஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்களும் அந்த செய்தியைப் படித்தோம். இருப்பினும் அதை உறுதி செய்ய எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை.
இந்த குண்டுவெடிப்பு மிகவும் கொடூரமானது, கடும் கண்டனத்துக்குரியது. இதை ஏற்கவே முடியாது. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்றார் கல்லேகஸ்.












Click it and Unblock the Notifications