குண்டுவெடிப்பு: ஐ.நா. தலைவர் மூன் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்புகளுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பான் கி மூன் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கும் அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தீவிரவாத செயல்களுக்கு எந்தவித காரணமும் கற்பிக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்களில் மக்கள் அமைதி காத்து அரசின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளதாக ெதரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications