For Daily Alerts
Just In
இந்தியா மீது மறைமுக போர்-நரேந்திர மோடி
சூரத்: இந்தியாவின் பொருளாதார கேந்திரங்களி்ன் மீது தீவிரவாதிகள் மறைமுக போரை நடத்த ஆரம்பித்துள்ளனர் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
19 குண்டுகள் பிடிபட்ட சூரத் நகருக்குச் சென்ற மோடி அங்கு நிருபர்களிடம் பேசுகையில்,
அகமதாபாத், சூரத்தை குறி வைத்ததன் மூலம் குஜராத்தின் பொருளாதாரத்தையே முடக்க சதி திட்டம் போட்டுள்ளனர்
இந்த வெடிகுண்டுகள், அதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தகவல்கள் தருவோருக்கு ரூ. 51 லட்சம் பரிசு வழங்கப்படும்.
மும்பை, பெங்களூர், அகமதாபாத், ஜெய்ப்பூர், ஹைதராபாத் என தாக்குதல் நடத்தியுள்ளதன் மூலம் இந்தியாவின் பொருளாதார கேந்திரங்கள் மீது தீவிரவாதிகள் மறைமுகப் போரை தொடங்கிவிட்டனர். இந்தத் தாக்குதலை நடத்துபவர்கள் இந்தியாவின் எதிரிகள் என்றார்.
Comments
Story first published: Wednesday, July 30, 2008, 15:32 [IST]